நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சியின் சட்ட ஆலோசகர்களை நியமித்து அறிவித்திருந்தார் சீமான். அப்பட்டியலில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளராக கயல்விழியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. வழக்கறிஞரான சீமானின் மனைவிக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.