ஓபிஎஸ் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு மார்ச் மாதம் முப்பெரும் விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.