அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை நேற்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச் செயலாளர் மட்டுமே.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளார். குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் செயல்படுவதாக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது. மேலும் 5 ஆண்டுகள் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்களே இணைந்துதான் எடுக்க வேண்டும் என்பது விதி என ஓபிஎஸ் தரப்பு கூறியது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு பல அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுகவில் சில முக்கிய விதிகளை எப்போதும் மாற்றக்கூடாது. ஆனால் அவசர கதியில் இபிஎஸ் மாற்றி உள்ளார். தனி மனிதனின் சுயநலத்துக்காக கட்சி பலியாகிறது. தொண்டர்களே எதையும் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.