வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து

இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலுவடைய கூடும். இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது  இந்திய நிலப்பரப்பை ஒட்டி ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாலு பகுதியாக உருவாக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.