
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாக மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு முதலில் விருப்பம் தெரிவித்தது. கடைசியில் யூ-டர்ன் அடித்து விட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன் வந்தார். ஆனால் சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்து விட்டனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார். அதற்கு திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மத்திய அமைச்சர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நிதியை தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்பிக்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என கூறுவீர்களா? ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியதை பிரதமர் மோடி ஏற்கிறாரா?
பிரதான் அவர்களே நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம். உங்களை போல நாக்பூரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அல்ல. தன்னை மன்னரென எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.