ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று  தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையமும் 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் சற்று முன்மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் பிறகு இயந்திரங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.