
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் விளக்கம் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், இந்தியாவில் மேலும் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் எந்தவிதமான தாக்குதல்களையும் சந்திக்க தயாராக இந்தியா இருக்கிறது என்றார்.
மேலும் இந்த தாக்குதல் பற்றி பேசிய கர்னல் சோபியா குரேஷி ஆப்ரேஷன் சிந்துர் தாக்குதல் 25 நிமிடங்கள் நடந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை நடைபெற்ற நிலையில் 9 தீவிரவாத அமைப்புகள் துல்லியமாக குறிவைத்து தகர்க்கப்பட்டது என்றார். மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.