கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். விடிய விடிய கனமழை பெய்திருக்கும் பொழுதிலும் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.