
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவியது. நேற்று முன்தினம் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் ராமதாசை சந்தித்து பேசினர்.
இன்று தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ராமதாஸ் மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட உறவுகளை சந்திப்பதற்காக சென்னை செல்கிறேன் என கூறினார். ஆனால் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பல் மருத்துவரை பார்க்க வந்திருப்பதாக கூறினார்.
மேலும் அன்புமணியை சந்திக்கும் திட்டம் இல்லை. எனக்கும் அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதலால் கட்சிக்கு எந்த பின்னடையும் இல்லை. மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்துள்ளேன். வேறு அரசியல் சந்திப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது குறித்து எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.