அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை, இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல என்று சாடினார். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் கையில் அதிமுக செல்லும் என்று அண்ணாமலை பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிடிவி, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை ஓரங்கட்டி விட்டு அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் உருவானதற்கு பாஜக முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற முனைப்புடன் செயல்படும் டிடிவி மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள அண்ணாமலையின் பேச்சி மீண்டும் அதிமுக உடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.