
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை மனிஷ் என்ற அதிகாரி நடத்துவதாக இருந்தது.

ஆனால் வேட்பு மனு பரிசீலணையில் திடீரென குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றியுள்ளனர். மேலும் அதன்படி ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த ஸ்ரீகாந்த் நேற்று இரவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தும் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.