தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பலமுறை பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்திய நிலையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது.

அதாவது ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு தற்போது தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு கழகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது தற்போது பரவும் தகவல்களில் எந்தவிதமான உண்மையையும் கிடையாது.

ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியான தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கும் நிலையில் ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.