
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வசிப்பவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சிக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் காலை 6 மணிக்கு பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் ரயிலில் உணவு வழங்கும் வசதி உள்ளது. அதன்படி பயணம் செய்த இரு பயணிகளுக்கும் உணவு பரிமாறுபவர்கள் காலை உணவை வழங்கினர். இட்லி, சாம்பார், வடை ஆகியன இந்த காலை உணவில் இருந்தது. இதனை சாப்பிட தொடங்கிய முருகன். சில மணி நேரத்திலேயே சாம்பாரில் மூன்று வண்டுகள் இருப்பதை கவனித்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உணவு பரிமாறு இவர்களிடம் தெரிவித்தார்.
அதற்கு அவர்கள் உணவில் இருப்பது வண்டு இல்லை கடுகு, சீரகம் என மழுப்பினர். ஆனால் முருகன் சாம்பாரில் எப்படி கடுகு, சீரகம் ஊர்ந்து செல்லும் என தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உணவு வழங்கும் நிறுவனமான பிருந்தாவன் புட் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் இனிமேல் தரமான உணவுகளை வழங்குவதாகவும் தெற்கு ரயில்வே அந்த இரு பயணிகளிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.