மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக வேலை பார்த்த 5 காவலர்களுக்கு, காந்தியடிகள் காவலர் விருது வழங்கயுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக பணியாற்றிய பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், கி.மகாமார்க்ஸ் தலைமை காவலர், க.கார்த்திக் தலைமை காவலர், கா.சிவா
இரண்டாம் நிலை காவலர் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான காந்தியடி விருதுகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விருது தமிழக முதல் அமைச்சரால் 2025ம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இத்துடன் பரிசு தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.