
விஜய் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி 4 வெற்றி சீசன்களை கடந்து தற்போது 5 வது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி மக்களை சிரிக்க வைக்கிறதுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். தற்போது மணிமேகலை பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழிடம் கேட்டபோது அவர் அவர்களுக்குள் உள்ள பிரச்சனை என்றும் உங்களுக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நமக்குள் பேசலாம். பொதுவாக உள்ள சமூக வலைதளங்களில் பேசக்கூடாது. உங்கள மாதிரி தான் நானும் எனக்கும் அவர்களுக்குள்ள பிரச்சனை என்னவென்று தெரியாது. என்ன பிரச்சனை என்று அவர்களிடமிருந்து தகவல் வரும் அப்போது எல்லோரும் பாப்போம் என்று கூறி விரைவாக கிளம்பி விட்டார்.