மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி சையத். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தனது ஆட்டோவில் பயணம் செய்த முகரம் அலி முகமது இப்ராஹிம் (56) என்பவருடன் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

அதன்பின் ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி தலைமறைவாகினார். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரது இருப்பிடம் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அந்த வழக்கு முடிவு பெறாமல் நீண்ட நாட்களாக இருந்தது. கடந்த 24 ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த வழக்கை காவல்துறையினர் தற்போது மீண்டும் விசாரிக்க தொடங்கினர்.

அந்த விசாரணையில் குற்றவாளி முஸ்தகின் அலி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அதன் பின் அவரது சொந்த ஊருக்கு சென்று அவர் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்களிடம் காவல்துறையினர் கேட்டு அறிந்தனர்.

சுமார் 5 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர தேடலுக்குப் பிறகு பல்கார் மாவட்டத்தில் முஸ்தகின் அலி தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். தற்போது அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.