நடிகை ரகுல்ப்ரீத் சிங் இப்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் இவர் ஹிந்தியிலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் ரகுல்ப்ரீத் சிங் அளித்த ஒரு பேட்டியில் “தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தி சேனல்களில் கொண்டாடப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி திரைப்படங்கள் இந்திய சினிமாவின் ஒருபகுதியே. ஆகவே இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.

ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் அதுவே பார்வையாளர்களை கண்டுபிடிக்கும். சமூகவலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளதால் அதுபற்றி விவாதங்கள் நடக்கிறது. நம்மிடம் நல்ல கதை, கலைஞர்கள், படைப்பாளிகள் இருக்கின்றனர். இதன் வாயிலாக சர்வதேச திரைப்படங்களை உருவாக்க இயலும்” என்று கூறினார்.