தமிழ்நாட்டுப் பெண்களிடம் அதிக தங்க நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உலக கோல்ட் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக தங்க நகைகள் கருதப்படுகிறது. இது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளில் முக்கியமாக இருக்கிறது. இந்தியாவில் வாழும் பெண்கள் 24000 டன் தங்க நகைகளை வைத்துள்ளனர். இது மற்ற நாடு வைத்திருக்கும் அளவை விட மிகவும் அதிகம். இதன் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. உலகில் இந்தியாவில் மட்டும் 11% தங்கம் உள்ளது.

இது உலகின் முதல் 5 நாடுகளின் அளவைவிட மிகவும் அதிகம். அதாவது அமெரிக்காவில் 8,000 டன்னும், ஜெர்மனியில் 3,300 டன்னும், இத்தாலியில் 2,450 டன்னும், பிரான்ஸில் 2,400, ரஷ்யாவில் 1,900 டன் என  வைத்துள்ளன. இந்தியாவில் 40% நகைகள் தென்னிந்திய பெண்களிடம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்களிடம் மட்டும் 6270 டன் நகைகள் உள்ளது. இந்தியாவின் வருமான வரித்துறை சட்டத்தின் படி திருமணமான பெண்கள் 500 கிராம் வரை நகைகள் வைத்திருக்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் நகைகளும், ஆண்கள் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம் என்று உலக கோல்ட் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.