உலக மனநல தினத்தை முன்னிட்டு LIVE LOVE LAUGH FOUNDATION நடத்திய நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தன்னுடைய பிரசவத்திற்கு பின்னர் தூக்கம் இல்லாமல் தான் எடுத்த சில முடிவுகள் தன்னை பாதித்ததாகவும், மன அழுத்தமாகவும், எரிச்சலாகவும் உணர்ந்ததாக கூறினார்.

வலி, கோபம் போன்ற உணர்ச்சிகளை உணர்வதும், அதிலிருந்து மீள்வதும் இயல்புதான் என்று கூறினார். செப்டம்பர் 8-ம் தேதி ரன்வீர் சிங், தீபிகா படுகோன் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.