கன்னி ராசி அன்பர்களே..!
தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் விருத்தி சிறப்பாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிப்பீர்கள்.
குடும்பத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறைந்துவிடும். குழந்தைகளிடம் முன்கோபத்தை காட்டகூடாது. உறவினர் மற்றும் நண்பர்களிடம் கோபங்கள் இல்லாமல் பேசுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வேலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை தேவை. ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டு செல்ல வேண்டும். எதார்த்தத்தை வெளிப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையில் அன்பு இருக்கும். மாணவர்கள் முயற்சி செய்தால் வெற்றிப்பெறலாம். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் சரியாகிவிடும். தனிப்பிரச்சினைகளைப் பற்றி பேசி பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படி சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு, எந்தவொரு வேலையும் செய்யுங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் கருநீலம்.