ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும்.

செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே இருக்கும். திருமணத்திற்கான எண்ணங்கள் நிறைவேறும். பெண்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று நகைகளை இரவலாக யாருக்கும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தங்கள் சரியாகும். பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். நண்பர்களால் நல்ல விஷயங்கள் நடைபெறும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் விலகிச்செல்லும். கல்விக்காக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு பணியை செய்து வாருங்கள், நல்ல முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.