துலாம் ராசி அன்பர்களே…! பாக்கிகள் வசூலாகி பரவசத்தை ஏற்படுத்தும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும. இடம் பூமியில் ஏற்பட்ட வில்லங்கம் விலகிச் செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் நிகழக்கூடும். இருக்கும் வீட்டை மாற்றும் சிந்தனை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று கவனம் வேண்டும்.சரக்குகளை அனுப்பும் பொழுதும் சேமிக்கும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நிலையில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகி விடும் பிரச்சனை இல்லை.

கணவன் மனைவி வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். காதலில் உள்ளவர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 9.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் ஊதா நிறம்.