
சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, நாங்கள் வெறும் ஜாதி, மத அரசியலையும், பெருமிதங்களையும் மக்கள் மத்தியில் வாரி இறைத்து கொண்டிருப்பவர்கள் அல்ல.
எப்பொழுதுமே மக்களுக்கும், இந்த மண்ணுக்கு என்ன தேவை தேசிய அளவில் அதனை வலிமை பெற என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இயங்கும் இயக்கம். அதனால்தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது நாங்கள் தேசத்தின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவர்கள் என்னை சராசரியான அரசியல்வாதியைப் போல பார்க்கிறார்கள். ஏதோ திருமாவளவன் திருநீற்றை அழித்துவிட்டான் என அரசியல் பேசி வருகிறார்கள். ஆனால் நாங்கள் தேசத்தை புதுப்பித்துக் கட்டமைப்பதற்காகவும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்காகவும், அம்பேத்கரின் கனவை நினைவாக்குவதற்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள்.
எங்களை வெறும் டீ,பன் கொடுத்து ஏமாற்றி விடலாம் என கணக்கு போடாதீர்கள். நாங்கள் 6 சீட், 8 சீட்டு கொடுத்தோம் அதற்கு மேல் அவர்களுக்கு நாங்கள் கொடுப்பதாக ஊக்கப்படுத்தவில்லை.
எப்பொழுதுமே 10 சீட்டுகளுக்கு மேல் நாங்கள் கொடுக்க மாட்டோம் எனக் கூறுவது உங்கள் மதிப்பீடு. ஆனால் எங்களைப் பொருத்தவரை நாங்கள் 234 தொகுதிகளுக்கும் இணையானவர்கள் தகுதியானவர்கள் அந்த வலிமை எங்களுக்கு உண்டு. என கூறினார்.