
ரயில்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது இ-ஆதார் வெரிஃபிகேஷன் மூலமாக உண்மையான பயனாளர்கள் மட்டுமே தட்கல் டிக்கெடுகளை புக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது இ ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே விரைவில் இதன் அங்கீகாரத்தை பயன்படுத்த உள்ளது என்றும் இது உண்மையான பயனர்களுக்கு தேவைப்படும் போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் இரண்டரை கோடி பயனர் கணக்குகளை IRCTC நீக்கி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.