அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் தலைமை  ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. ஆகவே கூடிய விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.