ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த எம்மர்சன் மனங்காக்வா  மரண தண்டனைக்கு எதிராக பகிரங்கமாக பேசினார். இவர் கடந்த 1960-களில் சுதந்திர போரின் போது மரண தண்டனை எதிர்கொண்டார். இதனால் அதை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். மேலும் பொது மன்னிப்பு வழங்கும் அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

இந்நிலையில் அந்நாட்டில் அந்த தண்டனையை ரத்து செய்வதற்கான மசோதா கடந்த வாரம் நடைபெற்றது. இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மரண தண்டனை ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு அதிபர் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் அந்நாட்டில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். புதிய சட்டத்தை அமல் படுத்தப்பட்டதை அடுத்து அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜிம்பாப்வேயில் கடைசியாக கடந்த 25ம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.