
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அனைத்து விசாரணை முடிவடைந்ததை அடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி வருகிற ஜூன் 2ம் தேதி அதாவது இன்று தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் வெளியாக உள்ளது.