அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை அண்ணாமலை வழங்கவில்லை. அண்ணாமலையிடம் விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.