இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது ஒரு வீட்டில் ஜான்சி என்பவர் உயிரிழந்து கிடந்தார். இவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு அந்த உரிமை கோரப்படாத உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்து சடங்குகளை செய்யும்படி கூறினர். பின்னர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அந்த உடலை ஒரு துணியில் சுற்றி பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அடக்கம் செய்யப்படும் மைதானத்தை அடைந்தார்.

அதன் பின்ன அவர் ஆம்புலன்ஸில் இருந்து சடலத்தை ஒரு சாக்கு பையை போல இழுத்து வெளியே எடுத்துச் சென்று பின்னர் 100 மீட்டர் தொலைவில் முதுகில் சுமந்து தானே இறுதி சடங்குகளை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.