
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பவாய் பகுதியில் ஒரு ஐடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருபவர் மராத்தி மொழியில் பேச வேண்டும் என நடைபெற்ற தகராறு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ பதிவில், மராத்தி மொழி தெரியாத செக்யூரிட்டி, ஒரு மராத்தி நபருடன் மராத்தி மொழியில் பேச மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எம்.என்.எஸ் குழுவினர் நேரடியாக அந்த ஐடி நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட செக்யூரிட்டியிடம் மராத்தி மொழியை அவமதித்ததற்காக விளக்கம் கேட்டு அந்த செக்யூரிட்டியை அறைந்தனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
पहले अंधेरी अब पवई
मराठी नहीं आने पर MNS के गुंडो ने L&T के सुरक्षा गार्ड को पीटा
पवई में के पूर्वांचल के गार्ड की मनसे के गुंडो ने पिटाई कर जान से मारने की धमकी भी दी.. कहा मराठी भाषा का अनादर करने वाले किसी भी व्यक्ति को नहीं बख्शेंगे।
#Mumbai #MNS #Maharastra #Pawai pic.twitter.com/oXzvMb2xgA
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) April 1, 2025
மேலும் இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிராவில் வாழ விரும்புகிறவர்கள் மராத்தி மொழிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனது தாய்மொழி உரிமை உள்ளது போல மகாராஷ்டிராவின் மராத்தி மொழியையும் அவமரியாதை செய்யக்கூடாது என அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.