சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றுவதில் டிரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஆயிரம் 6 ஆயிரம் பேரை இறந்தவர்களாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டது.

எனவே அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 6000 க்கும் மேற்பட்ட குடியேறிகள் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளை பெறவோ முடியாது.  சமூக பாதுகாப்பு எண் என்றால் அமெரிக்கா குடிமக்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணாகும்.