ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட்டு வருகிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். முதலில் பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலிய அணியை 188 ரன்களில் சுருட்டியிருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்ஷ் 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடதால் 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணியில் சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.