மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் திமுகவினுடைய ஆதரவை பெற்ற காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்று, அகற்றப்பட வேண்டியது. அரசியலில் ஓய்ந்துபோய், தோற்றுப்போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் மாளிகைகள் உருவாக்கப்பட்டது. இதை ஏழை மக்களுக்கு மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என மகாத்மா காந்தி அன்றே சொன்னார் என்று வைகோ கூறினார்.