இ-ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அந்த வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவமும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. புனேவில் அண்மையில் ஓலா ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ விபத்து குறித்து விளக்கமளித்த ஓலா நிறுவனம், புனேவில் விபத்தான அந்த ஸ்கூட்டரில் வேறு நிறுவனங்களின் உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே உ பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது