மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவில் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  தந்தை வீட்டில் வசித்து வரும் 24 வயதான இளம்பெண், தூங்கிக் கொண்டிருந்த தனது 18 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது உறக்கத்தில் இருந்து விழித்த தங்கை கோபத்தில் இது பற்றி அக்காவிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.

எனினும் அவரது அக்கா, மறுபடியும் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக அவரது தங்கை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று அக்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரளித்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.