
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணிகளில் இருந்து வெளியேறிய போது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. அவரது தம்பியாக தான் நான் அரசியல் செய்தேன். அதிமுகவினருக்கு இது தெரியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியாமல் போனது. அவர்கள் என்னை தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
திராவிட இயக்கமே நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக பாஜகவால் பாதித்து விடக்கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்து இருக்கிறோம். அதிமுக அதன் செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்பதை தோழமையுடன் சுட்டிக்காட்டுகிறேன். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
அதிமுக தோழமைக் கட்சி என கருத்துவாதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம். அவர்கள் எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது. திமுகவுக்கு எதிராக அணி திரளுபவர்கள் கூட்டணி ஆட்சி முழக்கத்தை வைத்துள்ளனர். சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம். தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை. இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான் என்று தெரிவித்துள்ளார்.