தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் விமான கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

அதாவது மதுரையிலிருந்து சென்னைக்கு வர ரூ. 4542 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.18,127 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வர ரூ. 4214 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 17401 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு வர ரூ. 2334 ஆக இருந்த விமான திட்டம் தற்போது ரூ. 9,164 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவையிலிருந்து சென்னைக்கு வர ரூ. 3550 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 6475 ஆக உயர்ந்துள்ளது.