கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற கயானா மற்றும் பார்படாஸ் அணிகள் மோதிய போட்டியில் பார்படாஸ் அணியின் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 500-வது போட்டியில் களமிறங்கிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் 500க்கும்  மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 6 வீரர்களில் டேவிட் மில்லரும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, சோயப் மாலிக், சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

இந்தப் போட்டியில் பார்படாஸ் அணி தோற்றாலும், டேவிட் மில்லரின் இந்த சாதனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகும். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் டேவிட் மில்லர், இந்த சாதனையை தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.