
ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்று கூறுவார்கள். அப்படி ஒரு சம்பவம் ஐந்தறிவு ஜீவனான யானை நிகழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தித்திமதி அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு யானைகள் புலி, கரடி மான் போன்ற பல உயிரினங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்நிலையில் 2 காட்டு யானைகள் உணவுகளை தேடி தித்திமதி பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான மர சேகரிப்பு கிடங்குக்குள் நுழைந்தது. அப்போது ஒரு யானையின் தலை அங்கு பொருத்தப்பட்டு இருந்த இரும்பு கேட்டின் இரும்பு கம்பிக்குள் இடையே சிக்கிக் கொண்டது.
இதனால் அந்த யானை முன்னும் பின்னும் ஆக தள்ளியும் முயற்சித்தது. இருப்பினும் அதனால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை. வேதனையை அடைந்த அந்த யானை பிளிர தொடங்கியது. இதை பார்த்த மற்றொரு யானை கேட்டில் சிக்கிய யானைக்கு உதவி செய்து மாட்டிய தலையை வெளியே எடுக்க உதவியது. தலை சிக்கிய யானைக்கு ஏதோ சைகை செய்த மற்றொரு யானை கேட்டை தன் பலம் கொண்டு தள்ளியது. அப்போது தலை சிக்கிய யானை லேசாக தலையை சாய்த்து வெளியே எடுத்தது. பின்னர் இந்த 3 யானைகளும் வனப்பகுதிகள் சென்றது. இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.