சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு தொடங்கியது.அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில்  தொடங்கியுள்ளது.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தினார் எடப்பாடி. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு கலந்து கொள்ளும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.