எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் ஈரோடு இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது எனக் கூறிய அவர், சுய காரணங்களுக்காக அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் டிடிவி தினகரன் பேசியதாவது, எடப்பாடி பழனிசாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அ.தி.மு.க ஒரு வட்டாரக் கட்சியாக மாறி விட்டது. அதிமுக-வில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை இப்போது உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக துரோகிகள் கையில் சிக்கிக்கொண்டு உள்ளது. வரும் காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான் என்று அவர் கூறினார்.