செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அண்மையில் அகிலன் திரைப்படம் வெளியானது. தற்போது சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதன்பிறகு ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து ருத்ரன் என்ற படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர்  நடித்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தொலைக்காட்சியில் பணியாற்றும்போதும் சரி தற்போதும் சரி இதுவரை யாரும் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது கிடையாது. எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். இதுவரை எனக்கு அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை. மேலும் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. நான் இல்லை என்று அதை சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.