
முன்னதாக ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர், பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்றும், பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகி விடும் என்றும் அவர் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் பேசிய வீடியோ வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை, திமுக தான் இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. இது குறித்து தினசரி செய்திகள் வந்து கொண்டு உள்ளன.
ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி முதல்வர் வரும்போது அவருக்கு பிடிக்காமல் தான் கழிவு நீர் கால்வாயை திரை போட்டு மறைக்கிறார்கள். மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது தேமுதிக எங்களுடைய சுமூக உறவில் உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க. அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழக வெற்றிக் கழகம் ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பான விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உங்களை அழைத்து பேசியதாக தகவல்கள் வெளியானது. தவெக தலைவர் விஜய் உங்களை அழைத்து பேசினாரா என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அவர் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பான கேள்விக்கு அவரை மறுபடியும் ட்விட் செய்து விட்டாரே என்று தெரிவித்தார்.