
தமிழக அரசு துறைகளில் தற்போது 9,42,941 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 லிருந்து 60 ஆக கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் வேலைக்கு சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற வருகிறார்கள். குறிப்பாக மே மாதத்தில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும் போது தான் ஓய்வு பெறுவார்கள். அதன் அடிப்படையில் மே மாதம் 31ஆம் தேதி இன்றுடன் ஒரே நாளில் சுமார் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.
அதாவது குரூப்- ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 439 பேரும், சி பணியிடங்களில் 2185 பேரும், குரூப் பி பணியிடங்களில் 1136 பேரும் ஓய்வு பெற உள்ளன. கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவுகளிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிகமாகும்.
இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதமாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெறுகின்றனர். கடந்த மாதத்தில் 22 பேர் ஓய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.