
ராஜஸ்தானில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதற்காக ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையை வாடகைக்கு வாங்கியுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்ததை அடுத்து மாலையை மீண்டும் ஒப்படைக்கும் நாள் நெருங்கியது. இதையடுத்து திருமண வீட்டை சேர்ந்த இருவர் மாலையை எடுத்துக்கொண்டு அரியானாவுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சுஹார்பூர் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களது பைக்கின் மீது கார் ஒன்று மோதியது. பின்னர் காரில் இருந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி பண மாலையை பறித்து சென்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த பண மாலையின் மதிப்பு 15 லட்சம் என்று கூறப்படுகிறது.