நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார்.

சீமானை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தன்னை ஏமாற்றியதாகவும்,  தனக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார்.  சீமான் மீது ஐந்து பிரிவுகளில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்,  சீமான் இன்று ஆஜர் ஆகிறார்.

விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக ஆஜராக கூறி சீமானுக்கு  2 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. போலீசார் இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் சீமான் தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி  தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி உள்ளார்.

புகாரை நடிகை திரும்ப விஜயலட்சுமி திரும்ப பெற்ற போதிலும் ஏற்கனவே கூறியபடி விசாரணைக்கு வந்துள்ளார் சீமான். சீமானுக்காக வாதாட வழக்கறிஞர் என்ற முறையில் காவல் நிலையத்தில் வந்துள்ளார் மனைவி கயல்விழி. வளசரவாக்கம் காவல் நிலையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.