தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபுதேவா. நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் பிரபுதேவா வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுக்கு முதுகு வலி ஏற்பட்டபோது மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியாற்றிய பிசியோதெரபி மருத்துவர் ஹிமானிசிங் என்பவரை நடிகர் பிரபுதேவா காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதுவரை தன்னுடைய மனைவியை பொது இடங்களுக்கு அழைத்து செல்லாத பிரபுதேவா முதல் முறையாக திருப்பதி கோவிலுக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.