நாட்டில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். அதோடு அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது “AADHAAR FACE RD” என்ற முகம் அங்கீகார சேவையை அரசு அறிவித்துள்ளது. அதாவது “AADHAAR FACE RD”என்பது ஒரு நபரின் லைவ் முக படத்தை ஆதார் தரவு தளத்தில் பதிவு செய்யப்படும்.

பின்பு தேவைப்படும்போது உண்மையான பக்கத்தில் ஒருவரின் முகத்தை ஸ்கேன் செய்யப்படும். இதனை ஆதார் டேட்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட முகத்துடன் ஒப்பிட்டு பொருத்தம் செய்யும் செயல் முறையாகும். அதோடு ஆதார் எண் பதிவு செய்யும்போது அவரது முகத்தை வைத்து இது அவர் தானா என்பதை உறுதி செய்ய உதவுகிறது. இதன் மூலம் மோசடிகளை தடுக்க அரசு புதிய சேவையை கொண்டு வந்துள்ளது.