கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து உள்ளனர். அதாவது ஒருவர் பைக்கில் ரெடியாக இருக்க பின்னால் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் அருகே சென்றார். அந்த பெண், அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

 

பெண்ணை துரத்திச் சென்று கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு அந்த நபர் தனது கூட்டாளியுடன் தப்பி ஓடினார். இது தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்டது கவரிங் நகை  என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.