நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பிரமோக்குட்டன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் அந்த வழக்கின் புலன்விசாரணை முடிந்து உதகை மகிலா நீதிமன்றத்தில் அனைத்து மகளிர்  காவல் நிலைய ஆய்வாளர் நித்தியா  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி செந்தில்குமார் பிரமோக்குட்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.